தேவதாசி முறையை இந்தியாவில் இருந்து அழித்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை. இன்னும் இருக்கிறது. இன்னும் மஞ்சள் பூவோடு நன்றாகவே உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. காதும் காதும் வைத்த மாதிரி, அந்தச் சடங்கு ரொம்ப ரொம்ப ரகசியமாகவும் நடந்து வருகிறது.
தேவதாசி முறையை 1947-ஆம் ஆண்டே இந்தியா தடை செய்து விட்டது. இருந்தாலும், எங்கேயாவது அது ஓர் இடத்தில், எப்படியாவது வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில்லறை ஆண்களுக்குத் தீனி போடும், பாவம் இரண்டு கால் ஜீவன்களும் வாழவே செய்கிறார்கள். மக்களும் தெரிந்தும் தெரியாதது மாதிரி போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். வருகிறார்கள் போகிறார்கள். வாழ்த்திவிட்டுச் செத்தும் போகிறார்கள்.
இந்தியா, கர்நாடகா மாநிலத்தில் தார்வாட் என்கிற ஒரு கிராமப்புற நகரம். அந்த நகரத்தின் எல்லையில் சாவுந்தாடி என்கிற ஒரு புறநகர்க் கிராமம். இங்கு ஜெல்லம்மா என்கிற ஒரு தெய்வம். அதற்கு ஒரு சின்னக் கோயில். இந்தக் கோயிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு இருக்கின்றது.
ஜெல்லம்மா குலதெய்வத்துக்கு சிறுமிகள் தாரை வார்த்துக் கொடுக்கப் படுவது, அங்கே அனைவருக்கும் தெரிந்த விஷயம். தாரை வார்க்கப் படுவது பெரிய பெண்கள் இல்லை. எல்லாம் எட்டு பத்து வயதுச் சிறுமிகள். இந்தச் சிறுமிகள், பெரிய மனுஷிகள் ஆவதற்கு முன்னாலேயே கோயிலுக்கு தானம் செய்யப் படுகிறார்கள். அவர்கள் பெரிய மனுஷியானதும் ஒரு பெரிய அணுகுண்டு ரெடியாக இருக்கும். அவர்கள் யாரையும் திருமணம் செய்யக் கூடாது. தங்களின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி எவருடனும் தொடர்புகள் வைத்துக் கொள்ளக் கூடாது.
தேவதாசி முறை என்பது பெண்கள் மீது திணிக்கப்பட்ட சுரண்டல்
ஆனால், ஆலய குருக்கள், கிராமத் தலைவர்கள், பணக்கார பெரிய மனிதர்களுக்கு, இந்தச் சிறுமிகள் சேவை செய்ய வேண்டும். என்ன சேவை தெரியுமா. அவர்களுக்கு மனைவியாக இருக்க வேண்டும். அதாவது பாலியல் சேவை செய்ய வேண்டும். இது தெய்வத்துக்கு செய்கின்ற ஒரு பெரிய திருத் தொண்டு என்று கிராம மக்கள் நம்புகின்றனர். நம்ப வைக்கப் படுகின்றனர். ஆலயமே கதி என்று வாழ்நாள் முழுவதும், அந்தச் சின்னஞ் சிறுசுகள் அங்கேயே இருக்கிறார்கள். தப்பிச் செல்ல முடியாமல் அங்கேயே செத்தும் போகிறார்கள்.
அப்படியே தப்பிச் செல்ல முயற்சி செய்தால், அவர்களைச் சமுதாயம் மன்னிக்காது. அது ஒரு தெய்வக் குற்றம். அப்படி ஒரு பயமுறுத்தல். ஆக, தேவதாசி முறை என்பது பெண்கள் மீது திணிக்கப்படும் ஒரு வகையானச் சுரண்டல். அப்படித்தான் சொல்ல வேண்டும்.
பெரிய மனுஷன்களின் வைப்பாட்டி
சமூக ரீதியாக, பின் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமிகள், கடவுளின் பெயரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப் படுகின்றார்கள். அதுதான் சத்தியமான உண்மை. இந்தியாவில் இந்தத் தேவதாசி முறை இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனையான வேதனை.
வேண்டும் என்றால் அன்றைக்கு அவர்கள் தேவதாசிகளாக இருந்து இருக்கலாம். கோயில் குளத்துக்கு வரும் பெரிய மனுஷன்களுக்கு வைப்பாட்டியாக இருந்து இருக்கலாம். அப்படித் தானே இருந்தது. இப்போதைக்கு நம் பார்வையில் இவர்கள் அப்படி தெரியவில்லை. விவரம் தெரியாத அந்தச் சின்னப் பிள்ளைகளை ஒரு விலைமாதாக, ஒரு பொது மகளிராகப் பார்க்க என் மனசு இடம் கொடுக்கவில்லை.
அடிமட்டத்திற்கு அடிமையாகும் ஏழை மக்கள்
பாவம் இந்தச் சிறுமிகள். பெரும்பாலும், தலித் என்று சொல்லப்படும், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேவதாசி முறை என்பது ஒரு பட்டவர்த்தனமான விபச்சாரமாகத் தெரிகின்றது. இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா.
தேவதாசி முறை இன்னும் உயிர் வாழ்வதற்கு, கிராம மக்களின் அறியாமைதான் மூலகாரணம். அதனால் அவர்களுக்கு நல்லது நடக்கலாம் என்கிற ஓர் அதீத நம்பிக்கை. வறுமையில் வாடுகின்ற பெற்றோர்களுக்கு அது ஒரு மாற்று வழியாகவும் தெரிகின்றது.
ஜடப் பொருள்களாகும் சின்னஞ் சிறுமிகள்
அதனால், பிள்ளைகளைக் கோயில் சாமிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடுகின்றார்கள். கண்ணுக்குத் தெரிந்தே இப்படி என்றால், கண்ணுக்குத் தெரியாமல் என்ன என்ன நடக்கும்? சொல்லுங்கள். வசதி படைத்தவர்கள், ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கி, அவர்களை அடிமட்டத்திற்கு அடிமைப் படுத்தி விடுகிறார்கள். அந்த ஏழைகளின் பத்து வயது ஜீவன்களைத் தங்களின் உடல்பசிக்குத் தீவனங்களாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
உண்மையான நிலையை இப்படித் தான் சொல்ல வேண்டி இருக்கிறது. பதின்ம வயதுச் சிறுமிகள், வசதி படைத்த வயசான பிண்டங்களுக்கு பலிகடா ஆக்கப் படுகின்றனர். அவர்களின் உடல் ஆசைகளை நிவர்த்தி செய்யும் ஜடப் பொருள்களாக அந்தச் சிறுமிகள் பயன்படுத்தப் படுகின்றனர். அவ்வலவுதான். அதற்கு மறுபேச்சே இல்லை.
தேவதாசிகளாகச் சேவை செய்யும் போது, அந்தச் சிறுமிகளுக்கு ஓரளவுக்கு பணம் கிடைக்கிறது. கோயிலும் கொஞ்சம் பணம் கொடுக்கிறது. தற்காலிகப் புருசர்களாக வந்து போகிறவர்களும் காசு கொடுத்துவிட்டுப் போகிறார்கள்.
நிரந்தர மனைவியாக முடியாத அவலநிலை
அதைவிட அவளுக்குத் தாலி கட்டி, நிரந்தரமாக மனைவியாக ஆக்கிவிட்டுப் போகலாமே. பிரச்னையே இல்லை என்று சொல்லலாம். அதுதான் நடக்காத காரியம். ஏன் என்றால், அந்தச் சிறுமிகளைக் கோயிலுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் போதே, அவர்களுக்குப் பொட்டுக் கட்டி விடுகிறார்கள்.
அதனால் அப்போதே அவர்கள் கோயில் சொத்து என கணக்கில் எழுதப் படுகிறார்கள். இதை எழுத என் ம் கஷ்டமாக இருக்கிறது. வெண்கலம், வெள்ளிச் சாமான்களைத்தான் கோயில் கணக்கில் எழுதி வைப்பார்கள். ஆனால், ஒரு அம்மாவாக, ஒரு மனைவியாக, ஒரு மகளாக, ஒரு பேத்தியாக அழகு பார்க்க வேண்டியவள் ஒரு பெண். ஆனால், அவளைத் தட்டுமுட்டுச் சாமான்களின் கணக்கில் எழுதி வைப்பதை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது. இந்த மாதிரியான ஓர் அக்கப்போர் நம்முடைய பூர்வீக மண்ணைத் தவிர வேறு எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. நானும் கேல்விப்படவுல் இல்லை.
தொலைதூரங்களுக்கு ஓடிப் போன சிறுமிகள்
கோயிலின் முக்கியப் புள்ளி ஒரு நாளைக்குப் புருசனாக இருந்தால், மறுநாளைக்கு இன்னொருவர் புருசன் தகுதிக்கு வருகிறார். அடுத்த நாளைக்கு இன்னும் ஒரு பெரிய மனுஷருக்கு ‘டிக்கெட்’ கிடைக்கிறது. கோயிலில் இப்படி ஒரு பெரிய பட்டியலையே வைத்து இருப்பார்கள். அதன்படிதான் எல்லாமே நடக்கும்.
பொட்டுக் கட்டிய ஒரு பெண்ணை யாரும் நிரந்தரமாக மனைவியாக ஆக்கிக் கொள்ள முடியாது. அப்படி ஓர் எழுதப் படாத சட்டம் இருக்கிறது. யாராவது ஒருவர் அந்தப் பெண்ணை மனைவியாக ஆக்கிக் கொள்ள ஆசைப் பட்டால், விடவும் மாட்டார்கள். அதையும் மீறி தொலைதூரங்களுக்கு ஓடிப் போன சிறுமிகளும் இருக்கிறார்கள். ஆனால் என்ன. கண்ணில் படாமல் இருக்க வேண்டும். கண்டுபிடித்து விட்டால், தோலை உருத்துத் தொங்கப் போடுவார்கள். தவிர, பத்து நாளைக்கு அடைத்துப் பட்டினி போடுவார்கள்.
தேவதாசி என்றால் தேவர் அடியார்
சிறுமிகள் சம்பாதிக்கும் சம்பளம், அவர்களின் பெற்றோர்களைச் சென்று சேர்கிறது. ஒரு வகையில் பார்த்தால், பெற்றோர்களே தங்கள் மகள்களைக் கூட்டிக் கொடுப்பவர்களாகத்தான் எனக்குப் படுகிறது. இப்படி எழுத மனசு வரவில்லை. இருந்தாலும் என்ன செய்வது. இதற்கு வேறு ஒரு பொருத்தமான சொல் இருப்பதாகவும் தெரியவில்லை.
தேவதாசி என்பது ஒரு வடமொழி சொல். தமிழில் தேவர் அடியார். இந்தச் சொல்தான், பின்னாளில் தேவடியாள் எனும் வழக்குச் சொல் வருவதற்கு காரணமாகவும் அமைந்தது.
ஒரு காலத்தில், கிராமப் புறங்களிலும் மலேசியத் தோட்டப் புறங்களிலும், தமிழர்களிடையே தேவடியாள் எனும் அந்தச் சொல் ஓர் இழிவுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது ரொம்பவும் குறைவு.
ஏழை எளியவர்களைப் பலி கொடுக்கும் பலிக்கூடம்
உண்மையில் பார்க்கப் போனால், நடனக் கலைகளின் வழியாக ஆலயத்திற்குச் சேவை செய்யும் உயர்ந்த நிலைப் பெண்களே தேவதாசிகள் ஆகும். ஆனால், அதே அந்தப் பெண்கள், அப்போதும் இப்போதும் பண பலம் படைத்தவர்களுக்குப் பாலியல் பொருட்களாக மாற்றப் பட்டனர் என்பது தான் உண்மையிலும் உண்மை. அதை நினைத்தால் காலா காலத்திற்கும், வேதனைதான் மிஞ்சிப் போய் நிற்கும்.
தேவதாசி முறை என்பது குறிப்பிட்ட ஒரு மதம் நடத்திய பாலியல் பலாத்காரம் என்று சிலர் சொல்கிறார்கள். வசதி படைத்தவர்கள், ஏழை எளியவர்களைப் பலி கொடுக்கும் ஒரு பலிக்கூடம் என்றும் வேறு சிலர் சொல்கிறார்கள்.
உஷா எனும் வைகறைத் தெய்வம்
தேவதாசி முறை என்பது இந்தியாவில் மட்டும் இல்லை, உலகம் முழுமையும் பரவலாக இருந்து இருக்கிறது. பழம்பெரும் நாகரீகங்களில் இறை பணிகளுக்காகத் தங்களை அர்பணித்துக் கொண்ட ஒரு கலைஞர் கூட்டமே இருந்து இருக்கிறது.
இந்துக்களின் ரிக் வேதத்தில், வைகறைத் தெய்வம் என்று அழைக்கப்படுபவள் உஷா. அவள் ஓர் ஆடல் அரசியாக வர்ணிக்கப் படுகிறாள். மற்ற இதிகாசப் புராணங்கள், உஷாவை நல்ல ஒரு நடனப் பெண்மணியாகவே காட்டுகின்றன.
சுமேரிய, பாபிலோனிய நாகரீகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே இருந்த வழிபாட்டுக் கூடங்களில், நாட்டியப் பெண்கள் நல்ல சுத்தமான கலைச் சேவைகளுக்காக தங்களை அர்ப்பணித்து உள்ளனர். அதற்கு ஆதாரங்கள் உள்ளன.
1947-ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம்
தேவதாசி என்ற சொல், இந்தியாவின் பல இடங்களில் பலவிதமாக அழைக்கப் படுகிறது. ஆந்திரப் பகுதியில் மாதங்கி அல்லது விலாசினி. மராட்டியத்தில் பாசவி. கர்நாடகாவில் சூலி அல்லது சானி. ஒரிசாவில் மக. உத்திர பிரதேசத்தில் பாமினி. சங்ககால தமிழ் நூல்கள் இவர்களைப் பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி பெண்டுகள் என்று அழைக்கின்றன.
பொட்டு கட்டிவிடுதல் எனும் தேவதாசி முறைக்கு 1947-ஆம் ஆண்டே தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலமாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள வேலூர், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடகாவிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஓய்ந்த பாடில்லை.
ல்லானா மோகனம்பாள் படத்தைப் பாருங்கள்
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசிகளைப் பற்றியோ அல்லது அந்த சமூகத்தைப் பற்றியோ பேசக்கூடாது. அப்படிப் பேசினால், “பேசியவன் நாக்கு எரிந்துவிடும்” என்று எச்சரிக்கை செய்தார்கள். அந்த அளவுக்கு தேவதாசி முறைக்கு மதிப்பு கொடுத்து வந்தார்கள். ஆனால் போகப் போக மன்னர்களும், நிலப்பிரபுக்களும், முக்கியப் பிரமுகர்களும் தேவதாசிகளைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.
தில்லானா மோகனம்பாள் படத்தைப் பாருங்கள். ஓரளவுக்கு உண்மை தெரிய வரும். அதன் பிறகு தேவதாசி என்பது பொதுமகளிர் என்பதாகப் பொருள் கொள்ளப்பட்டு விட்டது.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படித்தவர்கள், பக்தர்கள் இந்த தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். பருவம் வராத குழந்தைகளைக் கோயிலுக்கு அர்ப்பணம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கும் சட்டம் வழி செய்கிறது. அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த தாதாபாய், 1912 செப்டம்பர் 18-இல் “பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்” எனும் பெயரில் ஒரு சட்டத்தையே அறிமுகம் செய்து வைத்தார்.
விராலிமலையில் தேவதாசிகள் இன்றும் உள்ளனர்
1947-இல் சென்னை மாநிலத்தின் முதல்வராக ஒ.பி.ராமசாமி இருந்தார். அந்தச் சமயத்தில் தான், சென்னை தேவதாசி தடுப்பு மசோதா ஒரு சட்டமாக்கப் பட்டது. சட்டமும் நிறைவேறி விட்டது. இருந்தாலும் சம்பிரதாய ரீதியாக தேவதாசி முறையை ஒழிக்க முடியவில்லை. தொட்ட குறை விட்ட குறையாக, இன்று வரை தொடர்ந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது.
காரைக்குடி பகுதியில் உள்ள சில சமூகத்தவர்கள் இன்றும் தேவதாசி முறையை விடாப்பிடியாகப் பிடித்து வருகின்றனர். விராலிமலையில் தேவதாசிகள் இன்றும் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தப் பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. அழிக்க முடியவில்லை. உலகம் அழிந்தாலும் தேவதாசி முறையை அழிக்க முடியாது போலத் தெரிகிறது.
கணவன்-மனைவி அங்கீகாரம் மட்டும் கிடைக்காது
இன்னும் சில தகவல்கள். தேவதாசியை யார் வேண்டுமானாலும் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம். மனைவியைப் போல் நடத்தலாம். ஆனால், கணவன்-மனைவி அங்கீகாரம் மட்டும் கிடைக்காது. ஒர் எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் நடந்தது. பழனியம்மாள் என்பவர் பொட்டுக் கட்டப் பட்டவர். 14 ஆண்டுகள், ராஜன் என்பவருடன் வாழ்ந்தார். குடும்பம் நடத்தினார்கள். ஒரு நாள் ‘உன்னை விட்டு விலகிக் கொள்கிறேன்’ என்று ராஜன் பிரிந்து போய் விட்டான்.
பழனியம்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எந்த உரிமையும் கொண்டாட முடியவில்லை. இப்போது தவிக்கிறார். விவசாயக் கூலியாக வேலை செய்து வருகிறார். அவர் பிழைப்பு அப்படி ஓடுகிறது. இது விராலிமலையில் நடந்த நிகழ்ச்சி.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தேவதாசி முறை, இன்றும் மறைமுகமாகப் பின்பற்றப்படுகிறது. சில நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. சியோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா. இப்போது அவருக்கு 25 வயது. பத்து வயது சிறுமியாக இருக்கும் போது அவருக்கு இருதய நோய். அவருடைய பெற்றோர்கள் தீபாவைக் சாமிக்குக் காணிக்கையாகத் தானம் செய்து விட்டனர். தீபா தேவதாசியாகி விட்டார். இனி சாகும் வரையில் அவர் ஒரு தேவதாசி.
நித்தியச் சுமங்கலி சடங்கு செய்வதில் பெற்றோர்கள் உறுதி
அந்திலி கிராமத்தில் ராஜவேணி என்ற ஓர் எட்டு வயதுச் சிறுமி. குலதெய்வம் மாரியம்மனுக்கு நேர்ந்து விடப்பட்டார். மூன்றாம் வகுப்பு படித்து வரும் ராஜவேணிக்கு விரைவில் பொட்டுக் கட்ட முடிவு செய்து இருக்கிறார்கள். அவளுக்கு, நித்தியச் சுமங்கலி சடங்கு செய்து வைப்பதில் பெற்றோர்கள் உறுதியாக இருக்கின்றனர். தெய்வம் கண்ணைக் குத்திவிடும் என்று சிறுமியைப் பயமுறுத்தி வைத்து இருக்கிறார்கள்.
ராஜவேணிக்கு துளியும் விருப்பம் இல்லை. ராஜவேணிக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆசை. இந்த மாதிரியான பெற்றோர்களை என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள். ராஜவேணிக்குப் பொட்டுக் கட்டினால், அவள் கோயில் சொத்தாகிப் போவாள். வயதான ஜொல்லு ’பார்ட்டி’களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அந்தச் சிறுமி நம்ப பக்கத்து ஊரில் இருந்தால் பரவாயில்லை. எப்படியாவது உதவி செய்யலாம்.
பொட்டுக் கட்டி விட்டால் குடும்பத்துக்கு விடியல்
கிருஷ்ணவேணி எனும் இன்னும் ஒரு 15 வயதுப் பெண். உளுந்தூர் பேட்டையில் படித்து வருகிறார். ராமகிருஷ்ணன் - அஞ்சலி தம்பதியினருக்கு இரண்டாவது மகள். இவர்களுக்கு மூத்தமகள் ராஜலட்சுமி. இந்த ராஜலட்சுமியின் கணவர் கொஞ்ச நாளைக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து குடும்பம் இன்னும் மீளவில்லை. ஆக, இரண்டாவது மகள் கிருஷ்ணவேணிக்கு பொட்டுக் கட்டி விட்டால்தான் குடும்பத்துக்கு விடியல் என்று ஒரு பெரிசு பற்ற வைத்து விட்டது. இப்பொழுது நெருப்பு கூரையைப் பொத்துக் கொண்டு எரிகிறது.
கிருஷ்ணவேணியை நித்திய கல்யாணியாக்குவது என்று அம்மா அப்பா முடிவு செய்து விட்டனர். இந்த நிலையில் சமூகநல ஆர்வலர்கள் சிலர், இந்தப் பிரச்சிசனையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இப்போது கிருஷ்ணவேணி அரசு நடத்தி வரும் தங்கும் விடுதியில் இருந்து படித்து வருகிறார். ஓர் உயிர் தப்பியது.
கிருஷ்ணவேணியை நித்திய கல்யாணியாக்குவது என்று அம்மா அப்பா முடிவு செய்து விட்டனர். இந்த நிலையில் சமூகநல ஆர்வலர்கள் சிலர், இந்தப் பிரச்சிசனையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இப்போது கிருஷ்ணவேணி அரசு நடத்தி வரும் தங்கும் விடுதியில் இருந்து படித்து வருகிறார். ஓர் உயிர் தப்பியது.
முன்பு தேவதாசியாக அர்ப்பணிக்கப் பட்ட பெண்கள், கோயில் நிர்வாகிகளின் தேவைகளை நிறைவு செய்து வந்தனர். பெண்பிள்ளைகள் ஆறு வயது முதல் எட்டு வயதிற்குள் இருக்க வேண்டும். கோயில் பூசாரி திருமணச் சடங்குகளைச் செய்வார். தெய்வத்தின் பெயரைச் சொல்லி, அவரே அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டுவார். அதன் பின்னர் நட்டுவன் அல்லது நடன ஆசிரியர் வந்து அந்தப் பெண்ணுக்கு இசை, நாட்டியம் கற்றுக் கொடுப்பார். அப்புறம் அந்தச் சிறுமி, வயசிற்கு வருவதற்கு முன்னாலேயே அர்ச்சனை நடக்கும். புரியும் என்று நினைக்கிறேன். பெருமூச்சு வருகிறது.
Cultural Research Institute of Lemuria - CRIL
Thursday, August 3, 2017
Thursday, April 14, 2016
பழங்களின் பெயர்கள்
- Apple -குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
- Ambarella -அம்பிரலங்காய்
- Annona -சீத்தாப்பழம்
- Annona muricata -முற்சீத்தாப்பழம்
- Apricot -சர்க்கரைப்பாதாமி
- Avocado -வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
- Banana- வாழைப்பழம்
- Batoko Plum -லொவிப்பழம்
- Bell fruit- பஞ்சலிப்பழம், ஜம்பு
- Bilberry –அவுரிநெல்லி
- Blackberry -மேற்கத்திய நாவற்பழம்
- Black currant -கறுந்திராட்சை
- Blueberry-ஒரு வகை நெல்லி
- Bread fruit- கொட்டைப்பலா, சீமைப்பலா
- Butter fruit- ஆனைக்கொய்யா
- Cantaloupe- மஞ்சல் நிற முலாம்பழம்
- Cashew fruit- முந்திரிப்பழம், கஜு
- Cherimoya- சீத்தாப்பழம்
- Cherry- சேலாப்பழம்
- Chickoo- சீமையிலுப்பை
- Citron- கடார நாரந்தை
- Citrus aurantium - கிச்சலிப்பழம்
- Citrus reticulata - கமலாப்பழம்
- Citrus sinensis - சாத்துக்கொடி
- Clementine - நாரந்தை
- Cocoa fruit - கொகோப்பழம்
- Cranberry - குருதிநெல்லி
- Cucumber - வெள்ளரிப்பழம்
- Custard apple - சீத்தாப்பழம்
- Damson -ஒரு வித நாவல் நிறப்பழம்
- Date fruit - பேரீச்சம் பழம்
- Devilfig - பேயத்தி
- Dragon fruit - ட்றொகன் பழம்
- Duku - டுக்கு
- Durian - முள்நாரிப்பழம், தூரியன்
- Emblica - நெல்லி
- Eugenia rubicunda - சிறு நாவற்பழம்
- Feijoi/Pinealle guava - புளிக்கொய்யா
- Fig - அத்திப்பழம்
- Persimmon fruit - சீமை பனிச்சம்பழம்
- Gooseberry - கூஸ்பெறி
- Grapefruit - பம்பரமாசு
- Grapes - கொடி முந்திரி, திராட்சை
- Guava - கொய்யாப்பழம்
- Honeydew melon - தேன் முழாம்பழம்
- Huckle berry - ஒரு வித) நெல்லி
- Jack fruit - பலாப்பழம்
- Jumbu fruit - ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
- Jamun fruit - நாகப்பழம்
- Kiwi frui - பசலிப்பழம்
- Kumquat - (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
- Kundang - மஞ்சல் நிற சிறிய பழம்
- Lansium - லன்சியம்
- Lemon - வர்க்கப்பழம்
- Lime - எழுமிச்சை
- Loganberry - லோகன் பெறி
- Longan - கடுகுடாப் பழம்
- Louvi fruit - லொவிப்பழம்
- Lychee - லைச்சி
- Mandarin -மண்டரின் நாரந்தை
- Mango - மாம்பழம்
- Mangosteen - மெங்கூஸ் பழம்
- Melon - இன்னீர்ப் பழம், முழாம்பழம்
- Morus macroura - மசுக்குட்டிப்பழம்
- Mulberry - முசுக்கட்டைப் பழம்
- Muscat grape - திராட்சை
- Orange - தோடம்பழம்
- Palm fruit - பனம் பழம்
- Papaya - பப்பாப் பழம்
- Passion fruit - கொடித்தோடை
- Peach - குழிப்பேரி
- Pear - பேரி, பெயார்ஸ்
- Pine apple - அன்னாசிப் பழம்
- Plum - ஆல்பக்கோடா
- Pomegranate - மாதுளம் பழம், மாதுளை
- Pomelo - பம்பரமாசு
- Pulasan - (ஒரு வகை)றம்புட்டான்
- Quince - சீமை மாதுளம்பழம்
- Rambutan- றம்புட்டான்
- Rasberry - புற்றுப்பழம்
- Red banana - செவ்வாழைப் பழம்
- Red Currant - ஒரு வித லொவி
- Sapodilla -சீமையிலுப்பை
- Sour sop/ Guanabana - அன்னமுன்னா பழம்
- Strawberry - செம்புற்றுப்பழம்
- Syzygium - ஜம்புப்பழம்
- Tamarillo - குறுந்தக்காளி
- Tamarind - புளியம்பழம்
- Tangerine - தேன் நாரந்தை
- Satsuma - நாரத்தை
- Tomato -தக்காளிப்பழம்
- Ugli fruit -முரட்டுத் தோடை
- Water melon- வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
- Wax jumbu -நீர்குமளிப்பழம்
- Resberry -இளஞ்செம்புற்றுப் பழம்
Friday, August 21, 2015
சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. —
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. —
Wednesday, August 19, 2015
தமிழ் மன்னன் இராவணன்
ஒழுக்கத்தில் சிறந்து பத்து துறைகளில் வல்லவனாய் திகழ்ந்த இராவணன் மருத்துவ துறையில் இயற்றிய 27 நூல்கள்
1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்
இந்த தமிழ் மன்னன் இராவணனை அழித்துவிட்டு இராமன் நாடு திரும்பி ஆட்சி அமைத்த நாளையே தீபாவளியாக வட நாட்டவர்கள் கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் வதம் செய்யப்பட நாள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்
இந்த தமிழ் மன்னன் இராவணனை அழித்துவிட்டு இராமன் நாடு திரும்பி ஆட்சி அமைத்த நாளையே தீபாவளியாக வட நாட்டவர்கள் கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் வதம் செய்யப்பட நாள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மகாபாரத போர்
பாகுபலி படத்தில் வரும் போர்களக்காட்சிகள் மற்றும் அதில் அமைக்கப்பட்ட திரிசூல வியுகம் ஆகியவை சிறப்பாக பேசப்படுகின்றன. ஆனால் 40 லட்சம்பேர் பங்குபெற்ற 18 நாட்கள் நடந்த மிகப் பிரமாண்டமான மகாபாரதப் போரில் பல வியுகங்கள் அமைக்கப்பட்டன.
1.கிராஞ்ச வியுகம் (heron formation)
2.மகர வியுகம் (crocodile formation)
3.கூர்ம வியுகம் (tortoise or turtle formation)
4.திரிஷுல வியுகம் (trident formation)
5.சக்ர வியுகம் (wheel or discus formation)
6.கமலா வியுகம் or பத்மா வியுகம் (lotus formation)
7.கருட வியுகம் (eagle formation)
8.ஊர்மி வியுகம் (ocean formation)
9.மண்டல வியுகம் (galaxy formation)
10.வஜ்ர வியுகம் (diamond or thunderbolt formation)
11.சகட வியுகம் (box or cart formation)
12.அசுர வியுகம் (demon formation)
13.தேவ வியுகம்(divine formation)
14.சூச்சி வியுகம்(needle formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் (horned formation)
16.சந்திரகல வியுகம் (crescent or curved blade formation)
17.மலர் வியுகம் (garland formation)
18.சர்ப வியுகம் (snake formation)
மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது. ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது.
படைப்பிரிவுகளின் கணக்கு
படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.
3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1 அக்குரோணி
குருசேத்திரப்போர் படை விபரங்கள்
குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அத்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.
கௌரவர் தரப்புப் படைகள்
துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:
பாகதத்தன் படைகள் - 1 அக்குரோணி
சல்யனின் மதுராப் படைகள் - 2 அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி
கிருதவர்மன் (கிருட்டிணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி
சயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி
காம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி
விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி
ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி
அத்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி
பாண்டவர் தரப்புப் படைகள்
விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் - 1 அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி
சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி
துருபதனின் படைகள் - 1 அக்குரோணி
மத்சய அரசன் விராடனின் படைகள் - 1 அக்குரோணி
திராவிட அரசர்களின் படைகள் (சோழரும் ,பாண்டியரும்) - 1 அக்குரோணி
தற்போதைய கணக்குப்படி பாண்டவர்கள் படையில் 7 அக்குரோணி
(15,30,900 படைகளும்) கௌரவர் படையில் 11 அக்குரோணி
(24,05,700 படைகளும்) இருந்தன.
1.கிராஞ்ச வியுகம் (heron formation)
2.மகர வியுகம் (crocodile formation)
3.கூர்ம வியுகம் (tortoise or turtle formation)
4.திரிஷுல வியுகம் (trident formation)
5.சக்ர வியுகம் (wheel or discus formation)
6.கமலா வியுகம் or பத்மா வியுகம் (lotus formation)
7.கருட வியுகம் (eagle formation)
8.ஊர்மி வியுகம் (ocean formation)
9.மண்டல வியுகம் (galaxy formation)
10.வஜ்ர வியுகம் (diamond or thunderbolt formation)
11.சகட வியுகம் (box or cart formation)
12.அசுர வியுகம் (demon formation)
13.தேவ வியுகம்(divine formation)
14.சூச்சி வியுகம்(needle formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் (horned formation)
16.சந்திரகல வியுகம் (crescent or curved blade formation)
17.மலர் வியுகம் (garland formation)
18.சர்ப வியுகம் (snake formation)
மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது. ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது.
படைப்பிரிவுகளின் கணக்கு
படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.
3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1 அக்குரோணி
குருசேத்திரப்போர் படை விபரங்கள்
குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அத்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.
கௌரவர் தரப்புப் படைகள்
துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:
பாகதத்தன் படைகள் - 1 அக்குரோணி
சல்யனின் மதுராப் படைகள் - 2 அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி
கிருதவர்மன் (கிருட்டிணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி
சயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி
காம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி
விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி
ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி
அத்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி
பாண்டவர் தரப்புப் படைகள்
விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் - 1 அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி
சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி
துருபதனின் படைகள் - 1 அக்குரோணி
மத்சய அரசன் விராடனின் படைகள் - 1 அக்குரோணி
திராவிட அரசர்களின் படைகள் (சோழரும் ,பாண்டியரும்) - 1 அக்குரோணி
தற்போதைய கணக்குப்படி பாண்டவர்கள் படையில் 7 அக்குரோணி
(15,30,900 படைகளும்) கௌரவர் படையில் 11 அக்குரோணி
(24,05,700 படைகளும்) இருந்தன.
Friday, October 24, 2014
இந்து சமுத்திரத்தில் மூழ்கிய கண்டம்
ஆதித் தமிழர்கள் வாழ்ந்த கடலில் மூழ்கிய லெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்றே எண்ண முடிகிறது அந்த அறிவிப்பின் மூலமாக!. இப்போதைய தமிழகத்துக்கு தெற்கேயேும், கிழக்கிலும், மேற்கிலும் பரவியிருந்த கண்டமாகக் கருதப்படுவது லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் மேற்கே ஆப்பிரிக்காவை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையிலும் பரவியிருந்ததாகக் கூறப்படும் இந்தக் கண்டம் பின்னர் கடலில் மூழ்கி அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெயரில் ஒட்டுமொத்த உலகமே ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர் இவை ஒவ்வொன்றாக படிப்படியாக விலகி இருக்கின்றன. இப்படி விலகியவின் மிகப் பெரும் பகுதி இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும் அதன் ஒரு நிலப்பரப்பு தற்போது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் இந்த நிலப்பகுதியானது சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அண்மையில் மொரிஷியஸ் தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு போதுதான் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிற துகள்களையும் கண்டறிந்துள்ளனர். இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவையாம்.மொரீஷியஸ் தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலேவந்து மொரீஷியஸ் தீவுநிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்றும் இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சரி இந்த மொரிஷியாவுக்கும் நம்ம லெமூரியா கண்டத்துக்கும் என்ன தொடர்பு? ஆதித் தமிழர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேஸ்வரத்துக்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. அப்படியானால் நம்ம லெமூரியா கண்டம்தான் அந்த மொரிஷியாவா என்ற தேடல் தொடங்கியிருக்கிறது...இன்னும் சில காலங்களில் நம்ம ஆதி கண்டத்தை எட்டிவிடலாம்!
Tuesday, October 21, 2014
தமிழ் மொழியின் சிறப்புகளில்
தமிழின் பெருமையை உலகம் போற்றுகிறது. தமிழர் நாமோ எம் மொழியின் சிறப்பை உணராமல் அந்நிய மொழியே உயர்வென எண்ணி அடிமை பூணுகின்றோம். தமிழின் சிறப்புணர்ந்து அதற்கென உயர் இடம் கொடுத்த சில உலகப் புகழ் பெற்ற இடங்கள்:
* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில் "பாளையகரர்கள் நுழை வாயில்" என்று தமிழில் எழுதப்பட்டிருக்கின்றதாம்.
* கனடா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பாராளுமன்றம் என்பது பொறிக்கப்பட்டிருக்கின்றது.
* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ் மொழியில் நீர் வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஒரு இடத்தில் அதன் பெயர் இடம் பெற்று இருக்கின்றது...
* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ் மொழியிலும் மாளிகையின் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கின்றது.
* 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தின் போது ஆங்கிலேய தளபதி "இந்தியாவின் மிக பெரியசொத்தான
திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது...இனிமேல்
அது வெறும் மண்தான்..ஆகவே அது நமக்கு தேவை இல்லை" என்று கூறினாராம்..
திருக்குறள் இந்தியாவின் சொத்து என அவர் கூறியது தவறு. அது தமிழ் நாட்டின் சொத்து! ஒட்டு மொத்த தமிழினத்தின் சொத்து!
Subscribe to:
Posts (Atom)
