Wednesday, October 15, 2014

தமிழரின் சிற்பக் கலை




கல்லிலே கை வண்ணம் கண்டவன் தமிழன். தமிழரின் சிற்பக் கலை சிறப்புக்கள் பற்றி பல்வேறு வியக்கத்தக்க வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. சில சில துளிகளாக அவற்றை தேடி கண்டு கொள்வோம்.

இந்த சிற்பம் தமிழரின் தலை சிறந்த சிற்ப நுட்பங்களில் ஒன்று.
நாம் இன்று பெருமையுடன் தமிழையும் தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அழித்து வரும் வேளையில், 1000 ஆண்டுக்கு முன்னர் தமிழன் செதுக்கிய சிற்பம் தான் இது. ஒரு விரலை விட குறைந்த உயரம். ஒரு கை நீளத்தை விட குறைந்த நீளம்.

தொழில் நுட்ப வளர்ச்சி காணாத அந்த காலத்தில் இப்படி ஒரு அருங்கலை.

தமிழ் நாட்டில் திருச்செங்கோடு என்ற இடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இந்த நுட்பமான நுணுக்கமான அழகிய அரும் சிற்பம் உண்டு.


No comments:

Post a Comment