Tuesday, October 21, 2014
ஊர்களின் பண்டைய பெயர்கள்
சில ஊர்களின் முழுமையான & மிக பழைய பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.
தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது
பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது
எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது
குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது
உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?
ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது
ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்
விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே
வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல
தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே ,இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார்
கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்" ஆகும்
பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது
மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,
குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்
நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்
நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.
வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.
தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.
மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்
ஏர்க்காடு
சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.
திருகோணமலை
இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்
கோணமாமலை....
என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்.
விருத்தாசலம் என்ற பெயரை தமிழில் மொழிபெயர்த்து "முதுகுன்றம்" ஆக்கிவிட்டார்கள். உண்மையான பெயர் "பழமலை".அங்கு குடிகொண்டுள்ள இறைவன் பெயர் பழமலைநாதர்.
தமிழறிஞர் பேராசிரியர் நன்னன் அவர்கள் வேடிக்கையாக "பழமலை" , "கிழமலை" ஆயிற்று என்று கூறுவார்.
"இலங்கையின் கிழக்குப் பகுதியின் எல்லை காலத்துக்குக்காலம் மாறுபட்ட போதிலும் திருக்கோணமலை (தட்சணாபதி), அதன் வடக்கு ஹோரவப்போத்தனை (உறவுப்பெற்றானை) , இந்தியாவின் வாடா நாட்டிலிருந்து படையெடுத்து வந்த ஆரிய அரசர்களை மட்டக்களப்பு மன்னன் சிங்ககுமாரன் கலி-3370 இல் எதிர்த்து வடக்கே திருக்கோணமலைக்கப்பால் துரத்தி எல்லைக்கல்லிட்ட இடத்தில் அவர்கள் சிங்ககுமாரனிடம் சமாதானம் கோரி இவனுரவைப் பெற்றதனால் அவ்விடத்திற்கு உறவுப்பெற்றானை என பெயர் சூட்டினான். "
-மட்டக்களப்புத் தமிழகம் (இயல் 9 பக் 412 ) -
(வி.சி.கந்தையா ,1964)
(முன்னாள் சிவானந்த வித்தியாலய ஆசிரியர்)
(அதுவே கால ஓட்டத்தில் மருவி ஹொரவப்பொத்தான என்றாகி இன்று தமிழர் வரலாற்றுக்கும் அவ்வூருக்கும் தொடர்பற்றது என்றாகி விட்டது. வடக்கு, கிழக்கை பிரித்தாழும் இனவாதத்தின் தூர நோக்கு செயற்பாட்டில் ஆரம்ப பிரதேசம் ஹொரவப்பொத்தான தொடங்கி மணலாறு ஊடாக வெற்றிகரமாக நகர்கின்றது.)
தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாரை " பிரகதீஸ்வரர்" என்றும் , முதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலை நாதரை " விருத்தகிரீஸ்வரர்" என்றும் மாற்றியுள்ளனர்.
https://www.facebook.com/photo.php?fbid=10152383010719865&set=p.10152383010719865&type=1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment